![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEbwO5m-6A0w9DaT0g8remXfbjHl5IYpMsynzTKUghYqdV2kObv44-GbYWPg5h9oYN1tzDZfGkVjolX18NllSxwolSebKbO3YhnO3yMxaMqsmR7dJnUukGRnRMb3NA72wlNeXoggHSnF9a/s320/images.jpg)
எரிமலைச் சேற்றிடை
சிறு பூ எனினும்
பரிபடை சூழ்ந்தெனை
உறுதுயர் தரினும்
விரி அரவு தீண்டி
நறு விடமிடினும்
நரிவாய்ப்பட்டே
நானழிந்தொழினும்-இப்படி
இன்னல் என்னிடை
வந்திடும் எனினும்; இல்லை
மன்னன் ஒருகுடை
மண்ணிடை எனினும்
என்னுயிர் இங்கு
மென் கருவறை புகுமா
இன்னொரு முறையும்
என் தாய்மடி பிறக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக