புன்னகை ஊற்றாய்
வெண்மதிக் கீற்று
வெளியினை நனைக்கும்
இருளினைக்கரைக்கும்
அந்தகாரம்... அந்தகாரம்...
போதும் போதும்
வந்ததூரம் சந்தனச்சேறு தேடி
இந்தப்பாதம்...
யாரது கேள்வி
கேட்பது வாழ்வில்.?
வாழ்க்கைகள் யாவும்
வேட்கைகள் தீது
பூக்களின் பாரம் காற்றினில் தீரும்
இங்கே
போனதும் வந்ததும்
ஆனதும் தந்ததும்
ஆனந்தத் தாண்டவ
பூந்தளிர் மண்டபம்...
இருப்பதும் பார்ப்பதும்
மறுப்பதும் சேர்ப்பதும்
மானிடச்சாபத்தின்
கல்லறைத்தேடல்கள்...
காலமும் நேரமும்
சித்திரை நிலவாய்
யோகமும் யாகமும்
முத்திரை அலகாய்... எனவே
கண்டிடு கண்டிடு - கண்டு அதை வென்றிடு
வென்றிடு வென்றிடு - வென்று அதை விண்டிடு
விண்டிடு விண்டு - விண்டு அதில் நின்றிடு
நின்றிடு நின்றிடு - நின்று அதைத் தந்திடு
தந்திடு தந்திடு முற்றுகை வேட்கை
தண்டனைச்சிறைகள் தூள் பட ஒடிய
வந்தனக்குரலில் வாழ்வது விடிய....
இங்கே கண்ணிமை போல
கவச குண்டலம் - அது
சகத்தினை வெல்வது
சர்வநிச்சயம்...
ஏனெனில்... இங்கே
புன்னகை ஊற்றாய்
வெண்மதிக்கீற்று....
வியாழன், 12 மார்ச், 2009
வியாழன், 5 மார்ச், 2009
வெற்றி எளிதே...
வெற்றிகள் என்பதிங்கு எளிதே...
நீ வென்றால்!
வெல்வதெப்படி?
வெற்றியின் சூட்சுமம்
உணர்ந்து தெறி..
சூட்சுமம் தெரிந்தவன்
வெல்வன் எதுவும்...
எனவே.. எனவே..
சுட்சுமம் கற்றுக்கொள்
வெற்றியைப் பெற்றுக்கொள்...
ஆழ்மனம் கண்டவன்
அகிலமே அறிவான்
தன்மனம் தெரியான்
தன்னையே அறியான்!
கணில்லாக் குருடற்கு கற்பனையே வெளிச்சம்
ஒலிகேட்காச் செவிடற்கு கண்ணொளியெ வெளிச்சம்
அங்கம் இல்லா முடவற்கோ ஆறறிவே வெளிச்சம்
மொத்தமுமே சுத்தமெனில் ஐம்புலனும் வெளிச்சம்
உண்மையது.. உண்மையெது
முற்றுணர்ந்து நுகர்ந்தே
கற்றவனும் விக்கி நிற்க
கற்றுக்கொள் சூட்சும வெளிச்சம்!
என்னென்று ஏதென்று
எங்கு சென்றும் தேடல் வேண்டாம்
ஏதெனில் யாதெனில்...
: உடனுரை ஐம்புலன்
உணர்ந்தாய் சூட்சுமம்:
இனி வெற்றிகள்
என்பதிங்கு எளிதே எளிதே... (தென்றல்)
புதன், 4 மார்ச், 2009
திங்கள், 2 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)