வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஈரத்தென்றல்தொட தேகம் சிலிர்க்கும்
அந்திப்பொழுதுகளில்...
காற்றின் முதுகிலேறிப் பயணம் போகும்
முகிழினம் பார்க்கையில்...
பசுமைச்சீருடை அணிந்த ஒற்றையடிப் பாதையில்
கரையாத பொழுதுகளில் கவனமாய் நடக்கையில்...
இன்னும்...இன்னும்...
மற்றபிற என் தனிமையெல்லாம்
மொத்தமாய்க் குத்தகை எடுத்துக்கொண்டவள் - நீ
எனவே என் அன்பே
என்னில் நான் இல்லை.!
இருப்பது பூ முல்லை நீ மட்டுமே...
ஆதலினால் அன்பே
என்னில் நீ நலம்
உன்னில் நான் நலமா.?


காதலர் தின வாழ்த்துக்கள்..