யுத்தம் இன்றி வெற்றி இல்லை
யுத்தம் இன்றி வெற்றி இல்லை...
வலது கையில் வைரம்
வ்யிற்றுப் பசிக்கு ஏன் அழுகை
கிணருமுழுதும் தண்ணீர்
பயிர்களுக்கு ஏன் வாட்டம்?
அறுவடை செய்யாது...
அடிமை விலங்கை அழகு பார்த்து
அவதியுருகிறாய்-
யுத்தமின்றி வெற்றியில்லை
யுத்தமின்றி வெற்றியில்லை
கனி வேண்டுமென்றால்
கண்ணை மூடிக் கனவு
கண்டால் கைக்கு
வந்து சேர்ந்திடுமா?
காம்பில் குறி வைத்து வீழ்த்து..
வலது கையில் வைரம்
வ்யிற்றுப் பசிக்கு ஏன் அழுகை?
ஓட்டைப் படகில் ஒடுங்கிக்கொண்டு
முடங்கிக் கிடந்து
மூழ்கிப்போக அல்லவா
முயல்கிறாய்!
புதிய படகில் துடுப்பிருக்க
இருதயத்திலும் துடிப்பிருக்க
துணைக்கு வர ஆளிருக்க
துணிந்துவர மறுப்பெதற்கு?
வலது கையில் வைரம்
வையிற்றுப் பசிக்கு ஏன் அழுகை?
போர்க் கருவிகளையெல்லாம்
புல்லாங்குழலாக்கி ஊதினோம்
சலித்தபோது புலுதியில் அல்லவா
தூக்கி எரிந்தோம்...
தூக்கியெறிந்துவிட்டு
வாலாட்டி நின்றோம்
நன்றிமிக்க நாய்கள் போல..
பித்துப்பிடித்ததால் அல்லவா
யுத்தக் கப்பல்களையெல்லாம்
புத்த மடமாக்கிவிட்டோம்...
போர் முரசை விற்று விட்டோம்
பொழுது போக்குச் செலவுக்காக...
சவுக்கிருக்கும் சாட்டைகளை
மூட்டைகட்டி மூலையில்
போட்டுவைத்து...
அவ்வப்போது எடுத்துச் சுழற்றினோம்
பம்பரம் சுழற்ற...
பேச்சிருக்கும்வரை பேசவும்
மூச்சிருக்கும்வரை போராடவும்
கற்றுக்கொள்...மூழ்கும் முன்பே!
குளத்தில் மீன்பிடிக்க
சேற்றில் இறங்கவேண்டும் என்றா
காற்றில் மீன் பிடிக்க
கற்பனை வலை வீசி
காலமெல்லாம் காத்துக்கிடக்கிறாய்?
பூக்களைப் பறித்துப் பறித்து
கைகளையெல்லாம்
மென்மையாக்கி விட்டாய்-தோழா
மலையைப் புரட்டவேண்டும்
என்பதையே மறந்துவிட்டாயா?
இன்னிசை கேட்டுக்கேட்டு
பழகிவிட்டதால் அல்லவா
இடி ஓசை கேட்டதும் பயம்?
தேக்கு மரத்தைத் தூக்கமுடியாமலா
வாழைத்தண்டை விட்டமாக்கி
வீடு கட்டமுயல்கிறாய் தோழா?
பாலை வனத்தை நினைத்து
பயப்பட்டுப் படுத்திருக்கிறாய்-நீ
புறப்பட்டுப் போனால் அங்கே
புதுச்சோலைவனம்
மலர்ந்துகிடக்கிறது உனக்காக...
இனியாவது தோழா
உறுதிப்படுத்திக்கொள்
உள்ளங்கைகளை மட்டுமல்ல
உன் உள்ளத்தையும்..
ஏனெனில்
யுத்தமின்றி வெற்றியில்லை!
யுத்தமின்றி வெற்றியில்லை!
(தென்றல் சக்தி)