வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

காதல்


புல் இதழிழ்
பூமியைப்புரட்டிப்போடும்
பலம் இருந்தது அன்று...
ஆனால் சின்னச் சிராய்ப்புகளுக்குக்கூட
உன் மடி தேடி அழும் பலவீனம்
யார் தந்தது இன்று?



புதன், 25 பிப்ரவரி, 2009


பெற்றவைகள்
உற்றவைகள் - இங்கே
பெயரெடுத்துக்
கற்றவைகள் மற்றவைகள்
ஏனோ
அற்றவைகள் ஆனதின்று...
எனக்குச் சற்றவைகள்
வேண்டும் தோழா...
எங்கோ
நேற்றவைகள்
காற்றலையில் தொலைந்ததடா...
தோற்றவைகள் வாழ்வில்
ஆயிரம் தோழா...
தோற்பதற்கு உயிர் வேண்டும்
என்னை எனக்குத் தந்துவிடு...
நினைத்தேன்
நெஞ்சில் வந்து நின்றாய்...
அழைத்தேன்
அருகில் இல்லை என்றாய்...


நினைவில் அணுக முடிகின்ற
அருகில் இருந்தும்
நிகழ்வில் ஏனோ வெகு தொலைவில்...


சனி, 21 பிப்ரவரி, 2009

வெற்றியாதெனில் நட்பே...

ஒருவன் வெற்றி பெற்றால்
அந்த வெற்றிக்கு உலகம் 
பல காரணங்களைச்சொல்லும்..

அவன் தோற்கின் அவனைமட்டுமே
அந்த தோல்விக்கு -உலகம் 
காரணமாய்ச்சொல்லும்..

எனவே தோழா
என்றும் வெல்வது பெரிதில்லை- நீ
என்றும் தோற்காமல் இருப்பதே பெரிது
 


புதன், 18 பிப்ரவரி, 2009

வெற்றி..

வெற்றியென்பது எளிதல்ல.!
வெற்றியென்பது எளிதல்ல -
தோல்வியைப் போல...
பார்வையாளனுக்கு என்றுமே
வெற்றி எளிதான ஒன்றே...
போட்டியாளனாய் உட்புகுந்து பார்
வெற்றி வெல்வதற்கு அரிதானதாகவும்
தோல்விக்கு காரணம் சொல்வதற்கு
எளிதானதாகவும் தெரியும்...
வென்றவனுக்கு வெற்றி எளிதே
ஆனால் அதற்கவன்
கண்டகளங்கள்... கொண்டஇரணங்கள்
உள்ளுறுங்கும் இரகசியம் ஊர் அறியா...
உழைப்பும் வலியும் இரணமுமின்றி
வெற்றி இல்லை...
எனவே வெற்றிக்குப் போராடு
பெயரோடும் புகழோடும் உன்
வாழ்வில் தேரோட...
வெற்றிக்குப் போராடு...

திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஞானம்...


வாழ்வதற்காகச் செத்து விடு - இனி
சாவதற்காக வாழ்வது எளிது...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஈரத்தென்றல்தொட தேகம் சிலிர்க்கும்
அந்திப்பொழுதுகளில்...
காற்றின் முதுகிலேறிப் பயணம் போகும்
முகிழினம் பார்க்கையில்...
பசுமைச்சீருடை அணிந்த ஒற்றையடிப் பாதையில்
கரையாத பொழுதுகளில் கவனமாய் நடக்கையில்...
இன்னும்...இன்னும்...
மற்றபிற என் தனிமையெல்லாம்
மொத்தமாய்க் குத்தகை எடுத்துக்கொண்டவள் - நீ
எனவே என் அன்பே
என்னில் நான் இல்லை.!
இருப்பது பூ முல்லை நீ மட்டுமே...
ஆதலினால் அன்பே
என்னில் நீ நலம்
உன்னில் நான் நலமா.?


காதலர் தின வாழ்த்துக்கள்..

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

நான்’ -எனச்சொன்னான் கடவுள்..
அவனது கொடை- பூமி
அவனது விருப்பம் சுழற்சி
அவனது கருணை மழை
அவனது சாந்தம் இரவு
அவனது தாகம் பகல்
அவனது விரக்தி வறட்சி
அவனது கோபம் பூகம்பம்
அவனது சாபம் பிரளயம்
அவனது எச்சம் உயிர்கள்
அவனது நஞ்சு மனிதன்
அவன் சொன்னான்
நான் கடவுள்’’

கனவு

கனவு காணாதே.. அதை நெஞ்சுக்குள் பதியமிடு!
அதற்கு தினம் நீர்வார்த்து நினை!
கனவு முளைக்கும்வரை அடைகாத்து நில்!
துளிர் விட்டதும் வேலியிடு!
கனவுச்செடிசுற்றி கலைகள் களை!
பக்கத்தளிர்களை பக்குவமாய் அகற்று!
அது செழித்து மொட்டவிழும்..
அன்று கனவு நனவாகும்..
நாளைய உலகு உனதாகும்..எனவே
கனவு காணாதே..
நெஞ்சுக்குள் பதியமிடு...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

உலகே..

அம்மணம் மறைக்கத்தான் ஆடைகள்
ஆனால் இங்கே - ஆடைக்குள்
அனைவரும் அம்மணமே..!