வியாழன், 5 மார்ச், 2009

வெற்றி எளிதே...



வெற்றிகள் என்பதிங்கு எளிதே...
நீ வென்றால்!

வெல்வதெப்படி?

வெற்றியின் சூட்சுமம்
உணர்ந்து தெறி..
சூட்சுமம் தெரிந்தவன்
வெல்வன் எதுவும்...


எனவே.. எனவே..
சுட்சுமம் கற்றுக்கொள்
வெற்றியைப் பெற்றுக்கொள்...

ஆழ்மனம் கண்டவன்
அகிலமே அறிவான்
தன்மனம் தெரியான்
தன்னையே அறியான்!

கணில்லாக் குருடற்கு கற்பனையே வெளிச்சம்

ஒலிகேட்காச் செவிடற்கு கண்ணொளியெ வெளிச்சம்

அங்கம் இல்லா முடவற்கோ ஆறறிவே வெளிச்சம்

மொத்தமுமே சுத்தமெனில் ஐம்புலனும் வெளிச்சம்

உண்மையது.. உண்மையெது
முற்றுணர்ந்து நுகர்ந்தே
கற்றவனும் விக்கி நிற்க
கற்றுக்கொள் சூட்சும வெளிச்சம்!

என்னென்று ஏதென்று
எங்கு சென்றும் தேடல் வேண்டாம்
ஏதெனில் யாதெனில்...

: உடனுரை ஐம்புலன்
உணர்ந்தாய் சூட்சுமம்:

இனி வெற்றிகள்
என்பதிங்கு எளிதே எளிதே... (தென்றல்)