இருட்டுச்சுகம்தனை
இருட்டும் முன்பே
திருட்டுத்தனமாய்த் திருடும்கூட்டத்தால்
காமப்பேய்களின் கலவியில் கூடலில்
கருவாய்த்தறித்த சிசுவதை
சிதைத்தல் வதையல்ல-அதை
உருவளர்த்துப் பெற்றுவீசி...
சாலையோரங்களில்
பேருந்து நிறுத்த மனிதக்காலடிகளில்
பசிக்காகக் கையேந்தி அழும்
அனாதை அம்மணக்குழந்தையாய்..
என் இதயம் திருடி
எங்கு வீசிப் போனாய்.... (தென்றல்சக்தி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக