வியாழன், 16 ஏப்ரல், 2009


இருட்டுச்சுகம்தனை

இருட்டும் முன்பே

திருட்டுத்தனமாய்த் திருடும்கூட்டத்தால்

காமப்பேய்களின் கலவியில் கூடலில்

கருவாய்த்தறித்த சிசுவதை

சிதைத்தல் வதையல்ல-அதை

உருவளர்த்துப் பெற்றுவீசி...

சாலையோரங்களில்

பேருந்து நிறுத்த மனிதக்காலடிகளில்

பசிக்காகக் கையேந்தி அழும்

அனாதை அம்மணக்குழந்தையாய்..

என் இதயம் திருடி

எங்கு வீசிப் போனாய்.... (தென்றல்சக்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக