வியாழன், 9 ஏப்ரல், 2009


எரிமலைச் சேற்றிடை
சிறு பூ எனினும்
பரிபடை சூழ்ந்தெனை
உறுதுயர் தரினும்
விரி அரவு தீண்டி
நறு விடமிடினும்
நரிவாய்ப்பட்டே
நானழிந்தொழினும்-இப்படி
இன்னல் என்னிடை
வந்திடும் எனினும்; இல்லை
மன்னன் ஒருகுடை
மண்ணிடை எனினும்
என்னுயிர் இங்கு
மென் கருவறை புகுமா
இன்னொரு முறையும்
என் தாய்மடி பிறக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக