வியாழன், 12 மார்ச், 2009

புரிந்தவர் தெரிந்து கொள்ள-தெரிந்தவர் புரிந்து கொள்ள

புன்னகை ஊற்றாய்
வெண்மதிக் கீற்று
வெளியினை நனைக்கும்
இருளினைக்கரைக்கும்

அந்தகாரம்... அந்தகாரம்...
போதும் போதும்
வந்ததூரம் சந்தனச்சேறு தேடி
இந்தப்பாதம்...

யாரது கேள்வி
கேட்பது வாழ்வில்.?
வாழ்க்கைகள் யாவும்
வேட்கைகள் தீது
பூக்களின் பாரம் காற்றினில் தீரும்

இங்கே
போனதும் வந்ததும்
ஆனதும் தந்ததும்
ஆனந்தத் தாண்டவ
பூந்தளிர் மண்டபம்...
இருப்பதும் பார்ப்பதும்
மறுப்பதும் சேர்ப்பதும்
மானிடச்சாபத்தின்
கல்லறைத்தேடல்கள்...

காலமும் நேரமும்
சித்திரை நிலவாய்
யோகமும் யாகமும்
முத்திரை அலகாய்... எனவே

கண்டிடு கண்டிடு - கண்டு அதை வென்றிடு
வென்றிடு வென்றிடு - வென்று அதை விண்டிடு
விண்டிடு விண்டு - விண்டு அதில் நின்றிடு
நின்றிடு நின்றிடு - நின்று அதைத் தந்திடு
தந்திடு தந்திடு முற்றுகை வேட்கை
தண்டனைச்சிறைகள் தூள் பட ஒடிய
வந்தனக்குரலில் வாழ்வது விடிய....

இங்கே கண்ணிமை போல
கவச குண்டலம் - அது
சகத்தினை வெல்வது
சர்வநிச்சயம்...

ஏனெனில்... இங்கே
புன்னகை ஊற்றாய்
வெண்மதிக்கீற்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக