வியாழன், 12 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

நான்’ -எனச்சொன்னான் கடவுள்..
அவனது கொடை- பூமி
அவனது விருப்பம் சுழற்சி
அவனது கருணை மழை
அவனது சாந்தம் இரவு
அவனது தாகம் பகல்
அவனது விரக்தி வறட்சி
அவனது கோபம் பூகம்பம்
அவனது சாபம் பிரளயம்
அவனது எச்சம் உயிர்கள்
அவனது நஞ்சு மனிதன்
அவன் சொன்னான்
நான் கடவுள்’’

கனவு

கனவு காணாதே.. அதை நெஞ்சுக்குள் பதியமிடு!
அதற்கு தினம் நீர்வார்த்து நினை!
கனவு முளைக்கும்வரை அடைகாத்து நில்!
துளிர் விட்டதும் வேலியிடு!
கனவுச்செடிசுற்றி கலைகள் களை!
பக்கத்தளிர்களை பக்குவமாய் அகற்று!
அது செழித்து மொட்டவிழும்..
அன்று கனவு நனவாகும்..
நாளைய உலகு உனதாகும்..எனவே
கனவு காணாதே..
நெஞ்சுக்குள் பதியமிடு...